பெ.நா.பாளையம் : கோவை --- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, கோவை தேயிலை ஏல மையத்தில் நடந்த ஏலத்துக்கு, 2.32 லட்சம் கிலோ தேயிலை துாள் கொண்டு வரப்பட்டது.ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 848 கிலோ ஏலம் போனது. சராசரி மதிப்பு ஒரு கிலோவுக்கு, 155 ரூபாயாக இருந்தது.இலை ரகம், ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 357 கிலோ வந்தது. 87 ஆயிரத்து, 872 கிலோ ஏலம் போனது. இலை ரக தேயிலையின் சராசரி மதிப்பு, ஒரு கிலோவுக்கு, 111 ரூபாயாக இருந்தது என, கோவை தேயிலை ஏல மைய செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE