திருப்பூர் : போலீசாருக்கான எழுத்து தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் வரும், 13ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர் வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புதுறை காவலருக்கான எழுத்து தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் வரும், 13 ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.திருப்பூர், அங்கேரிபாளையத்தில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, குமார் நகரில் உள்ள பிஷப் உபகாரசாமி பள்ளி, தாராபுரம் ரோடு செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்களில் நடக்க உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE