கோவை : சில்சார் - திருவனந்தபுரம் இடையே, கோவை வழியாக இன்று முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அசாம் மாநிலம் சில்சார் ஸ்டேஷனில் இருந்து, இன்று முதல் திருவனந்தபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வியாழன்தோறும் இரவு, 8:10 மணிக்கு சில்சாரில் இருந்து புறப்படும் ரயில்(02508) கவுகாத்தி, புவனேஸ்வர், விஜயவாடா, பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கோவை வழியாக நான்காம் நாள் இரவு, 8:45க்கு திருவனந்தபுரம் செல்கிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து வரும், 15ம் தேதி முதல் செவ்வாய்தோறும் மாலை, 4:55க்கு புறப்படும் ரயில்(02507) நான்காம் நாள் மாலை, 4:40க்கு சில்சார் சென்றடைகிறது. இத்துடன், இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் நான்கு, 13 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பிரிவு பெட்டிகள் இரண்டும் இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE