கோவை : பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி தேர்வுகள், ஜன., 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கோவை பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி மே/டிச., 2020 தேர்வுக்கு, இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.இவர்களுக்கான தேர்வுகள் டிச., 14ம் தேதி முதல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இச்சூழலில் இந்த தேர்வு ஜன., 20ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக துவங்கும் என, தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மாற்றி அமைக்கப்பட்ட தேர்வுக்கான அட்டவணை, பல்கலை இணையதளத்தில் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும் என, பாரதியார் பல்கலை தேர்வாணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கூடுதல் தகவல்களுக்கு, www.b-u.ac.in என்ற பல்கலை இணையதளத்தை பார்வையிடலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE