திருமங்கலம் : திருமங்கலம் அருகே கீழக்குயில்குடி ரோடு ஆதிசிவன் கோயில் எதிரிலுள்ள கண்மாயில் பழுதான மின் கம்பங்களை உயிரை பணயம் வைத்து சீரமைத்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு பிராமண சங்கத்தினர் பாரட்டு தெரிவித்தனர்.
இக்கண்மாய்க்குள் தண்ணீருக்குள் இருந்த பழுதான 3 மின் கம்பங்களை மின் வாரிய ஊழியர்கள் சீரமைத்தது குறித்து தினமலர் நாளிதழில் டிச. 5 செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கப்பலுார் துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் காத்தவராயன், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழியர்களை தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அமுதன், துணைச் செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் குரு சந்தானம், முரளிதரன் உள்ளிட்டோர் பாராட்டி கவுரவப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE