மதுக்கரை : கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பிஷ்வாஸ், 40; எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன், தனது காரில் குடும்பத்துடன் கோவை வந்து, பொருட்கள் வாங்கினார்.
பின், கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகே செல்லும்போது, குரும்பபாளையம் ரோட்டிலிருந்து ஒரு பைக், கார் மீது மோதுவது போல வந்தது.பிஷ்வாஸ் காரை நிறுத்தினார். பைக்கில் வந்தவர்கள், காரின் முன் பைக்கை நிறுத்தி, பிஷ்வாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரின் முன் கண்ணாடியை உடைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்.
பிஷ்வாஸ் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். பைக்கில் வந்த மலைசாமி கோவில் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் சசிகுமார், 21, தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பிரபு, 26 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர். தப்பிய பிரவீண், 21 என்பவரை தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE