உசிலம்பட்டி : உசிலம்பட்டி வேளாண்மைதுறை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் அமுதன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராமசாமி, கால்நடை டாக்டர்கள் மணிகண்டன், செல்வேந்திரன், துணை அலுவலர் புவனேந்திரன் மற்றும் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிர் சாகுபடி, ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இந்திராதேவி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE