திருப்பரங்குன்றம : திருப்பரங்குன்றம் ஆரியன்குளம் கண்மாயில் அனுமதியின்றி கட்டப்பட்ட மீன்வலையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இக்கண்மாய் தண்ணீர் மூலம் 80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழையால் கண்மாய் நிரம்பியுள்ளது. கண்மாயில் மீன்பிடிக்க வலையை சிலர் விரித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது தான் நெல் நாற்று பாவியுள்ளோம். நடுவதற்கு 20 நாட்கள் ஆகும். கண்மாயில் தண்ணீர் இருந்தால் மட்டுமே நெல் அறுவடை செய்ய முடியும். கண்மாய்க்குள் அனுமதியின்றி சிலர் மீன்களை விட்டு வலை கட்டியுள்ளனர். மீன்கள் பெரிதானவுடன் அவற்றை பிடிக்க இரவில் தண்ணீர் திறந்து விடுவர். இதனால் நெல் பயிர்களுக்கு தண்ணீரின்றி கருகிவிடும், என்றனர்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ''இரு ஆண்டுகளாக மீன் குத்ததை விடப்படவில்லை. சில தினங்களுக்கு முன் அங்கிருந்த வலைகள் அகற்றப்பட்டன. மீண்டும் அமைத்திருந்தால் அகற்றப்படும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE