மயிலாடுதுறை:சீர்காழி அருகே கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை பகுதிகளில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கொள்ளிடம் ஒன்றியத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அரசின் நிவாரண முகாமில் தங்கியுள்ள கீரங்குடி கிராம மக்களை சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு பாய், போர்வை, புடவை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, சட்டநாதபுரம் தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நிவாரண முகாமிற்கு சென்றார். அங்கு முதல்வர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நிமித்தமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, மயிலாடுதுறையில் மழை பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டு சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE