அவலுார்பேட்டை - மேல்மலையனுார் அடுத்த தாயனுார் கிராமத்தின் ஏரி மதகு பழுதடைந்ததால், தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது.மேல்மலையனுார் வட்டம் எய்யில் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில 253 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது.நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நேற்று காலையில் ஏரி நிரம்பி உபரி நீர் வழிந்தது. இதே போல் பருதிபுரம் கிராமத்திலுள்ள ஏரியும் நிரம்பியது. ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மேல்மலையனுார் ஏரிக்கு செல்கிறது. மேலும், இப்பகுதியிலுள்ள அனைத்து ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் மீதமுள்ள ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் மேல்மலையனுார் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியில் தாயனுார் கிராமத்தின் மதகு பழுதடைந்ததால், தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE