விழுப்புரம் - சோனியா பிறந்தநாளை யொட்டி, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்., கமிட்டி சார்பில் தேச தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சோனியா 74வது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., கமிட்டி சார்பில் கட்சி அலுவலகத்தில் நேற்று கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, காந்தி, ராஜீவ், காமராஜர் சிலைகளுக்கு, மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் நாராயணசாமி, ராஜ்குமார், குப்பன், பொது செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சேவாதள தலைவர் ராஜேஷ், பொது செயலாளர்கள் சேகர், மணிகண்டன், செந்தில், பொதுக்குழு தன்சிங், இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம், அமைப்பு சாரா தலைவர் வேலு, ஓ.பி.சி., தலைவர் செல்வம், நகர நிர்வாகிகள் மூர்த்தி, சுரேஷ், இலக்கிய அணி செந்தில், மகளிரணி மகேஸ்வரி, பரிமளா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உட்பட வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE