கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மணி, வார்டு கவுன்சிலர் முத்து, வி.சி., மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் பாலு, நகர செயலாளர் மனோஜ்குமார், இந்திய கம்யூ மாவட்டக் குழு உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE