மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் பன்றிகள் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகர், தென்பெண்ணையாற்றங்கரையில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தைச் சுற்றி அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித் திரிகின்றன. மேலும், அப்பகுதிகளில் உள்ள குப்பைகளைக் கிளறி விடுவதாலும், கழிவுநீரில் படுத்து புரள்வதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தொற்று நோய் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE