வடலுார்; கனமழையால் பாதிக்கப்பட்ட வடலுார் அடுத்த கொளக்குடி, ஓணாங்குப்பம் கிராம மக்களுக்கு வள்ளலார் குருகுலம் பள்ளியில் நிவாரணம் வழங்கப்பட்டது.வடலூர், சுத்த சன்மார்க்க நிலைய தலைவர் சங்கர்வாணவராயர், பாலசுப்ரமணியம், டாக்டர் பிரேமா அனுப்பிய நிவாரண பொருட்கள், கோவை குமரகுரு பொறியியல் கல்லுாரியை சேர்ந்த ரமேஷ், ரஞ்சித் முன்னிலையில், ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் கவிதா முன்னிலையில் வழங்கப்பட்டது.ஓணாங்குப்பத்தை சேர்ந்த 164 பேர், கொளக்குடி சேர்ந்த 38 பேர், சுத்த சன்மார்க்க நிலைய ஊழியர்கள் 35 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மெழுகுவர்த்தி பால் பவுடர், போர்வை, பாய், பிஸ்கட், கொசுவர்த்தி வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE