திருப்பாச்சூர் - திருப்பாச்சூர் பகுதியில், சேதமடைந்து பல்லாங்குழியாக மாறிஉள்ள, 100 அடி துார சாலையை சீரமைப் பதில், நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டி வருவது, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அடுத்து, திருத்தணியில் பிரிந்து திருப்பாச்சூர், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.திருத்தணி சாலை சந்திப்பிலிருந்து, திருப்பாச்சூர் செல்லும் சாலையில், 100 அடி துாரம் மிகவும் சேதமாகி, பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அருகிலேயே, கலெக்டர் அலுவலகம் இருந்தும் சேதமடைந்த இந்த நெடுஞ்சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE