திருவள்ளூர் - 'நம்' நாளிதழில், வெளியான செய்தியை தொடர்ந்து, திருவள்ளூர் டவுன் போலீசார், திருடு போன இருசக்கர வாகன ஓட்டிகள் அளித்த புகார் மீது வழக்கு பதிந்தனர்.திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில், அதிகளவில் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுக் கொண்டிருந்தனர்.இதில், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கொடுக்கும் புகார் மீது, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதியாமல் அலைக்கழித்து வந்தனர்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீசார், இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடு போனது என, வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.அதாவது, திருவள்ளூர் பூங்கா நகர் ரத்தினம் மகன் மணி, 47, என்பவர், ஸ்பிளன்டர் புரோ இருசக்கர வாகனம் திருடு போனது.தண்ணீர்குளம் பொன்னுசாமி மகன் சந்திரன், 47, என்பவர், ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனம் திருடு போனது என, இருவர் கொடுத்த புகாரின் மீது மட்டும், டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE