கிருமி நாசினி குடித்து பெண் பலிசெவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு, சுதா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் ஆத்தியப்பன், 36. இவருக்கு தீபா, 31, என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு துாங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தீபா வாந்தி எடுத்துள்ளார்.இதுகுறித்து, ஆத்தியப்பன் கேட்டதற்கு, கிருமி நாசினி பவுடரை குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பின், 7ம் தேதி, தீபா இறந்தார்.இதுகுறித்து, ஆத்தியப்பன் அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, எதற்காக கிருமி நாசினியை குடித்தார் என, விசாரிக்கின்றனர்.வலிப்பு நோயால் வாலிபர் பலிசெவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் கவிமணி, 34. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 6ம் தேதி வலிப்பு ஏற்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து, இவரது சகோதரர் அருள் அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE