சோழவரம் -சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், ஏரியில் கழிவு நீர் கொட்டிய, லாரி மற்றும் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சோழவரம் அடுத்த, நல்லுார் பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடியிருப்புகளின் கழிவு நீர் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டு, அசுத்தம் செய்யப்படுவதாக, சோழவரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முழுதும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வந்த, கழிவு நீரை ஏரியில் கொட்டிக் கொண்டிருந்த மூன்று டிராக்டர் மற்றும் இரண்டு லாரிகளை பிடித்தனர்.அவற்றை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்து, அதன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் என, ஆறு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE