கடம்பத்துார் - கடம்பத்துார் ஒன்றியத்தில், 61 ஏரிகள் முழுதும் நிரம்பியுள்ளன என, அதிகாரி கள் தெரிவித்தனர்.கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகளில், ஒன்றியக் கட்டுபாட்டில், 95 ஏரிகளும், 344 குளங்களும்; பொதுப்பணித் துறை கட்டுபாட்டில், 65 ஏரிகளும் உள்ளன.சிக்கல்இதில், சில தினங்களாக பெய்த கன மழையால், 21 ஒன்றிய ஏரிகள், 40 பொதுப்பணித் துறை ஏரிகள் என, 61 ஏரிகள், 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 344 குளங்களில், 35 குளங்கள் முழுதும் நிரம்பிஉள்ளன.பல ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், மழை நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செஞ்சி ஊராட்சியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து, விவசாயம் செய்வதால், ஏரியில் சேகரமாகும் மழை நீரை ஆக்கிரமிப்பாளர்களே, மதகுகள் வழியாக நீரை வெளியேற்றி வருகின்றனர்.கோரிக்கைதகவலறிந்த பொதுப்பணித் துறையினர் மதகுகளை அடைத்து ஏரியிலிருந்து நீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். இது பிற விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஏரிகளை மீட்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE