திருத்தணி - ரயில்வே தானியங்கி கேட், பத்து நாட்களாக பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அதிகளவில் நெசவாளர்கள் இருக்கின்றனர்.மேலும், மத்துாரில், முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளதால், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.இதுதவிர, திருத்தணியில் இருந்து, மத்துாருக்கு, இரண்டு அரசு பஸ்கள் மற்றும் ஒரு மினி பஸ் இயக்கப்படுகிறது.இந்நிலையில், திருத்தணியில் இருந்து, மத்துார் செல்வதற்கு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பொன்பாடி அருகே, ரயில்வே தானியங்கி கேட்டை கடந்து தான், மத்துார் ஊராட்சிக்கு செல்ல முடியும்.ஆனால், மத்தூர் ரயில்வே தானியங்கி கேட், 10 நாட்களாக பழுதாகி உள்ளது.ரயில்வே நிர்வாகம் நேற்று வரை ரயில்வே தானியங்கி கேட்டை பழுது பார்க்காமல் உள்ளதால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.ரயில்வே நிர்வாகம் தானியங்கி கேட் பழுதை நீக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE