சென்னை- கிண்டியில் உள்ள, ஐ.டி.ஐ.,களில், மாணவ - மாணவியர் சேர்க்கைக்கான கால அவகாசம், நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், அரசின் தொழில் பயிற்சி நிலையங்கள், கிண்டியில் செயல்படுகின்றன.இங்கு, உணவு தயாரிப்பாளர், டிஜிட்டல் போட்டோகிராபர், பிசியோதெரபி டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகளுக்கு, மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது. தற்போது சேர்க்கைக்கான கால அவகாசம், நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், திருவான்மியூர் மற்றும் கிண்டியில் உள்ள மகளிருக்கான தொழில் பயிற்சி நிலையத்திலும், பேஷன் டிசைனிங், எம்பிராய்டரி உள்ளிட்ட படிப்புகளுக்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.பயிற்சியில் சேருவோருக்கு, இலவச மடிக்கணினி, உதவித்தொகை, 'பஸ் பாஸ்' உள்ளிட்ட, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், பயிற்சி முடிவில், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE