ஈரோடு: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு வரும், 13ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், வேளாளர் மகளிர் கல்லூரி, நந்தா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது. 8,895 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், 1,338 பெண்கள், ஒரு திருநங்கையும் அடங்குவர். காலை, 11:00 முதல், 12.20 மணி வரை தேர்வு நடக்கும். 80 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்வர்கள் காலை, 9:00 மணிக்கே தேர்வு அறைக்கு வர வேண்டும். ஈரோடு எஸ்.பி. தங்கதுரை தலைமையில், ஒரு கூடுதல் எஸ்.பி., ஆறு டி.எஸ்.பி.க்கள் என மொத்தம், 900 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, தேர்வு மையங்களை கண்காணிப்பார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE