அம்மாபேட்டை: ''தி.மு.க.,வினரே ராசாவை மதிப்பதில்லை,'' என, அமைச்சர் கருப்பணன் கூறினார். ஈரோடு மாவட்டம், பவானி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி, சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதால், மக்கள் விரும்பும் முதல்வராக இருப்பார். முதல்வர் பற்றி பேச, தி.மு.க.,வின் ராசாவிற்கு எந்த தகுதியும் இல்லை. தி.மு.க.,வினரே ராசாவை மதிப்பதில்லை. இந்திய அளவில், தி.மு.க.,தான் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல்களை, பெரிய அளவில் செய்துள்ளது. சேலம் எட்டு வழிச்சாலை குறித்து, நீதிமன்றம் உத்தரவின்படி, முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE