ஈரோடு: ஈரோடு, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், வாயிற்கூட்டம் நடந்தது. வரும், 17ல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்களுக்கு ஙூவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நோட்டீஸ் வழங்க உள்ளோம். அதற்குள் அரசு உடனடியாக, போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களின், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகைய்யா தலைமை வகித்தார். எல்.பி.எப். மாநில பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட, பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE