ஆத்தூர்: மா.கம்யூ., தாலுகா செயலர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர், மலைவாழ் மக்கள், ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து, போராட்டம் நடத்தினர். அப்போது, கீரிப்பட்டி பேரூராட்சியின், மேல்தொம்பை, கீழ் தொம்பை, பைத்தூர் ஊராட்சியில், பைத்தூர், வானபுரம், கல்லுக்கட்டு, மணிவிழுந்தான் ஊராட்சியில், பூமரத்துப்பட்டி, முட்டல் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, 2018 முதல், விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, மலையாளி ஜாதிச்சான்று தாமதமின்றி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். அவர்களிடம், ஆர்.டி.ஓ., துரை, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE