பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, வாழக்குட்டப்பட்டி, மாரியம்மன் கோவில் அருகே, ஆறு மாதத்துக்கு முன், ஒன்றியம் சார்பில், ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டது. அதில், தண்ணீர் வந்ததால் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இதுவரை தனியாக மின் இணைப்பு பெறவில்லை. இதனால், மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'ஊராட்சி சார்பில், மின் இணைப்பு பெற விண்ணப்பம், முன் வைப்பு தொகை, மின் வாரியத்தில் செலுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாளில், மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE