சேலம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க, மாநில செயற்குழு தீர்மானப்படி, சேலம் மாவட்ட சங்கத்தலைவர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் ராமனிடம் அளித்த மனு: கிராம உதவியாளருக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், நாள் கணக்கில் போனஸ், ஜமாபந்தி படி, இயற்கை இடர்பாடு சிறப்பு படி ஆகியவை வழங்க வேண்டும். பதவி உயர்வை, 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதற்கான பணி நிறைவு, 10 ஆண்டு என்பதை, ஐந்தாண்டாக குறைக்க வேண்டும். கடைசியாக பெறும் ஊதியத்தில், 50 சதவீதம், ஓய்வூதியமாக தேவை. இனி, தேர்வாணையம் மூலம், உதவியாளர் பணியை நிரப்புதல், தகுதி அடிப்படையில், ஓட்டுனராக பதவி உயர்வு அளித்தல், சீனியாரிட்டி முறையில், பதவி உயர்வு வழங்குதல் என்பன உள்பட, 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE