தர்மபுரி: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம், 2,000 டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்க, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து நேற்று, 2,000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டன. தற்போது, கொரோனா ஊரடங்கால், தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில், தமிழக அரசின் சார்பில், ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும், இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது. இதனால், அரிசி தேவை அதிகரித்துள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரிக்கு நேற்று சரக்கு ரயில் மூலம், 58 வேகன்களில், 2,000 டன் நெல் மூட்டைகள் வந்தன. இதை, ரயில்வே கூட்ஸ்செட் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி, தர்மபுரியில் உள்ள, பல்வேறு தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு, அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE