கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சேகர் மற்றும் போலீசார், பாவக்கல் மயானம் அருகே, ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே டிராக்டரை ஓட்டி வந்தவர், போலீசாரை பார்த்ததும், டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடினார். டிராக்டரை சோதனையிட்டதில், தென்பெண்ணை ஆற்றிலிருந்து கடத்தி வந்த ஒரு யூனிட் மணல் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், அந்த டிராக்டரின் டிரைவரும், உரிமையாளருமான, பாவக்கல் அம்பேத்கர் நகரை சோந்த ஜடையன், 45, என்பவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE