கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில், மாவட்ட கூட்டுறவு துறையில் ரேஷன்கடை பணியாளர் பணியிடங்களில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள, 65 ரேஷன் கடை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று (டிச., 9) முதல் வரும், 23 வரை தொடர்ந்து நடக்கவுள்ளது. இத்தேர்வு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு, 700 பேர் வீதம், 8,135 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் தலைவர் சந்தானம், ஓசூர் துணைப்பதிவாளர் சுந்தரம், கிருஷ்ணகிரி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர் சரவணன், கிருஷ்ணகிரி சரக துணைப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE