திருச்சி: திருச்சியில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட வெள்ளாளர் சங்கத்தினர் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
'தமிழகத்தில் உள்ள தேவேந்திரர் சமுதாயத்தின், ஏழு உட்பிரிவுகளை இணைந்து, தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது' என, சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், வேளாளர் என்ற பரிந்துரையை எதிர்த்து, வெள்ளாளர் சமுதாயத்தினர், சில நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று, வ.உ.சி., பேரவை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமணன், செயலர் வெங்கடாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்டோர், திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கையில் வைத்திருந்த கொடியால், அரசு பஸ்களை அடித்தனர். மேலும், கையில் வைத்திருந்த சில மது பாட்டில்களை போலீசார் மீது வீசினர். இதில், பெண் போலீஸ் ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து, போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கலைந்து போக செய்தனர். மேலும், 70 பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE