அரூர்: அரூர் அடுத்த, புழுதியூர் வாரச்சந்தையில், 23 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 95 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 25 ஆயிரம் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 6,000 முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த வாரச்சந்தையில், வியாபாரிகளின் வருகை மற்றும் மாடுகளின் வரத்து குறைந்து, 23 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE