கரூர்: வீட்டு உபயோக துணி வகை உற்பத்தி தொழிலுக்கு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய, அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், இன்று கரூர் வெண்ணைமலை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை: குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட, குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. பல நிறுவனங்களின் நிர்வாகிகள் வெங்கடாசலம், அசோக்குமார், பிரிட்டோ, தொழிற்சங்க நிர்வாகிகள் மாணிக்கம், தங்கராஜ், மாடசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். பிறகு, சில நிறுவனங்களில் கள ஆய்வும் நடக்கிறது. தொழில்சார்ந்த பிரதிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE