கரூர்: கரூர் அருகே டி.என்.பி.எல்., ஆலை கேட் அருகே நிறுத்தப்பட்ட லாரியை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சின்ன முதலைப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், 38. இவருக்கு சொந்தமான லாரியை, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர், 40, என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் கடந்த, 5 இரவு கரூர் அருகே புகளூர் டி.என்.பி.எல்., ஆலை கேட்,4ல் லாரியை, சுரேந்தர் நிறுத்தி விட்டு டிபன் சாப்பிட சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, சுரேந்தர் சென்று பார்த்த போது, லாரியை காணவில்லை. இதுகுறித்து, லாரி உரிமையாளர் சசிகுமார் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE