குளித்தலை: கோவக்குளம் காலனியில் நிலப்பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், வாட்ச்மேன் கைது செய்யப்பட்டார். குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் காலனியைச் சேர்ந்தவர் தொழிலாளி சுப்பிரமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாட்ச்மேன் நீலமேகம், 50, என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 6 இரவு, சுப்ரமணி மகன் கார்த்திக், 22, தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை, நீலமேகம் தகாத வார்த்தையால் பேசியதுடன், அரிவாளால் வெட்ட வந்தார். கார்த்திக் தடுத்ததில் கையில் காயம்பட்டது. நீலமேகம் மனைவி சரஸ்வதியும், மிரட்டல் விடுத்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாயனூர் போலீஸார் வழக்கு பதிந்து, நீலமேகத்தை கைது செய்தனர். இதே வழக்கில் நீலமேகம் கொடுத்த புகார்படி, சுப்ரமணி, கார்த்திக் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE