கரூர்: கரூர்- மதுரை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூரில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக நாள்தோறும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அதை சுற்றியுள்ள இணைப்பு சாலைகள், பல இடங்களில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளன. மழைக்காலங்களில், தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. எனவே, இணைப்பு சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE