கரூர்: கரூர்-சேலம் பழைய சாலை வாங்கப்பாளையம் பிரிவில், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், விபத்துகளை தவிர்க்கவும் பல மாதங்களுக்கு முன் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சிக்னல் விளக்குகள் சேதமடைந்துள்ளன. அதை சரி செய்யாமல், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் தவறி விட்டனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வரும் நிலையில், சிக்னல் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE