பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டதால், பார்க்கும் இடமெல்லாம் பசுமையாக காணப்படுகிறது. மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் நெல் சாகுபடி செய்வதற்கு, கடந்த ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மோளகவுண்டம்பாளையம், சமயசங்கிலி, களியனூர், எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், தெற்கு பாளையம் மற்றும் பல பகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. வாய்க்காலில் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வருவதாலும், மழை பெய்து வருவதாலும் கடந்த சில வாரங்களாக நெற்பயிற்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், எந்த பகுதிக்கு சென்றாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, பசுமையாக இயற்கை காட்சி போல தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE