நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத, 146 பேர் மீது வழக்கு பதிந்து, 29 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த, 146 பேர் மீது வழக்கு பதிந்து, 29 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE