குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கோட்டைமேடு மேம்பாலம் சோதனை ஓட்டத்திற்கு திறக்கப்பட்டது. குமாரபாளையம் அடுத்த, சேலம்- கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பகுதியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதன் காரணமாக, மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் போராடினர். இரு ஆண்டுகளுக்கு முன், விளைவாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இறுதி கட்ட பணிகள் சில நாட்களாக நடந்த நிலையில் சோதனை ஓட்டம் துவக்கப்பட்டு, லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில், பா.ஜ., பிரமுகர் ஓம் சரவணா தலைமையில், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 'ஒரு வாரத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்' என, பணி மேற்பார்வையாளர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE