நாமக்கல்: மோகனூர் அடுத்த ஒருவந்தூர் காவிரி நகரை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் சக்தி பிரபு, 34. அவர், கடந்த, 7 இரவு, 11:00 மணிக்கு, ப.வேலூர் சென்று விட்டு வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சர்க்கரை ஆலை வண்டிகேட் அருகில் பஸ் நிறுத்தத்தில் இருந்த, மூன்று பேர், அவரை நிறுத்தி, பணத்தை கேட்டு மிரட்டி, 1,000 ரூபாயை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது, சத்தம் போட்டுள்ளார். அங்கு திரண்டு வந்த மக்களை பார்த்து, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல், மோகனூர் அடுத்த மணியங்காளிப்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி, 41. அவர், கூட்டுறவு வங்கியில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 1:30 மணிக்கு, வீராசாமி மனைவி மற்றும் மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த, இரண்டு லேப்டாப், இரண்டு மொபைல் போன்களை, நான்கு நபர்கள் திருடி சென்றனர். சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 18-19 வயதைச் சேர்ந்த, நான்கு பேர், மோகனூர் வெங்கடேஷ், 23 ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE