பள்ளிபாளையம்: பெரியார் நகர் பிரிவு சாலை பகுதியில் குடிநீர் வால்வு பகுதியில் வீணாகும் தண்ணீரை, மக்கள் பயன்படுத்தும் வகையில், தொட்டியில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் அருகே, ஆர்.எஸ்., சாலையிலிருந்து பெரியார் நகர் செல்லும் பிரிவு சாலையில் குடிநீர் குழாய் வால்வு உள்ளது. இங்கு, பல சமயத்தில் தண்ணீர் வீணாகி அருகில் உள்ள வடிகாலில் செல்கிறது. நேற்று முன்தினமும் வீணாகியது. இங்கு தொட்டி அமைத்தால், இவ்வாறு வீணாகும் தண்ணீர் அதில் தேங்கியிருக்கும். சுற்றுவட்டார மக்களும் தங்களுக்கு தேவையான நேரத்தில் தண்ணீரை பயன்படுத்துவர். இங்கு அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளதால், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE