மோகனூர்: மோகனூர் அடுத்த ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லிபாளையத்தில், ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால், தலைமையாசிரியர் சாந்தி மட்டுமே பள்ளிக்கு வந்து செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பள்ளிக்கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டடத்தில் வேயப்பட்ட ஓடு, உடைந்துள்ளது. அதற்கு சாட்சியாக, தற்போது தொடர் மழை பெய்து வருவதால், உடைந்த ஓடுகள் மூலம், வகுப்பறைக்குள் மழைநீர் கொட்டுகிறது. அலுவலகம், வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கட்டடத்தையும், உடைந்த ஓடுகளையும் மாற்றி சீரமைக்க வேண்டும்' என, இரண்டு ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் பள்ளி துவங்க உள்ள நிலையில், ஓடுகள் உடைந்து விழுந்து, மாணவர்கள் தலையை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது. பள்ளி கட்டடம் உறுதியில்லாததால், மாணவர்களின் சேர்க்கையம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE