கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள, 'செட்டிநாடு பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கும் அலுவலகத்தில், சோதனை நடந்தது. வருமான வரித் துறையை சேர்ந்த, 15 அதிகாரிகள் அடங்கிய குழு, காலை 8:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டது. சோதனை குறித்து தகவல் வெளியில் செல்வதை தடுக்க, அனைத்து ஊழியர்களின் மொபைல்போன்களையும் அதிகாரிகள் வாங்கி வைத்திருந்தனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களைச் சேகரித்து, ஆய்வு செய்தனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE