மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்புடைய போதைப் பொருள் வழக்கை,என்.சி.பி., எனப்படும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், நேற்று முன்தினம், மும்பையின் சில இடங்களில், என்.சி.பி., அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய, ரெஜல் மகாகாள் என்பவர், கைது செய்யப்பட்டார். அவரை, நாளை வரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE