திருப்பூர்;தினசரி காய்கறி மார்க்கெட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' கட்டுமான பணி நடந்து வருவதால், ரோட்டை தகரம் வைத்து அடைத்துள்ளனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், ஸ்மார்ட் சிட்டி பணி நடப்பதால், கே.எஸ்.சி., பள்ளி ரோடு வழியாக பல்லடம் ரோட்டை அடைய, தினசரி காய்கறி மார்க்கெட் ரோட்டை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரிசி கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி என சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் காய்கறி மார்க்கெட் ரோட்டை முக்கியமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால், இந்த ரோட்டில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.இச்சூழலில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் மூலமாக, திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி முழு வீச்சில் நடக்கிறது. இதனால், அந்த ரோட்டை இருபுறமும் அடைத்துள்ளனர். பணி முடியும் வரை, அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியிலுள்ள நுாலகத்துக்கு செல்வோர் வழக்கம் போல் சென்று வரலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE