ஸ்ரீஹரிகோட்டா:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் 17ந்தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட், தட்பவெப்ப நிலையை கவனத்தில் கொண்டு அன்று மாலை 3.41 மணியளவில் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 'சி.எம்.எஸ்-01' என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை உடன் சுமந்து செல்லும். இந்திய பகுதி, அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நீட்டிக்கப்பட்ட, 'சி பேண்ட்' அலைக்கற்றை சேவைகளை வழங்குவதற்கான நோக்கில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE