புதுடில்லி:கொரோனாவால், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களை, தங்கள் நன்றியால், மாணவர்கள் ஆனந்தத்தில் மூழ்கடிக்கின்றனர்.
கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான வகுப்புகள், ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகின்றன. இதில், மாணவர்கள் முறையாக பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.அவற்றை பொய்யாக்கும் வகையில், ஆங்காங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன. இதன்படி ஒரு கல்லுாரி பேராசிரியர் ஆன்லைன் வாயிலாக வகுப்பை துவங்கினார்.
ஆனால், 20 மாணவர்களில் ஒருவரும் கேமராவை, 'ஆன்' செய்ய வில்லை. மாணவர் முகங்களை பார்க்க முடியாத பேராசிரியர், 'எப்படி பாடம் நடத்துவது' என, கேட்டு உள்ளார். உடனே மாணவர்கள் அனைவரும், கேமராக்களை ஒரே நேரத்தில், 'ஆன்' செய்து, தங்கள் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் அட்டைகளை கைகளில் பிடித்தபடி இருந்தனர். இதனால் பேராசிரியருக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுபோன்ற சம்பவங்கள், தற்போது பல்வேறு இடங்களிலும் நடக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE