ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஆறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.90 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தா அணைகள் வழியாகவும், மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடை வழியாகவும் அணைக்கு தண்ணீர் வருகிறது.சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட 'புரெவி', 'நிவர்' புயல்களால் அணைக்கு நீர் வரத்து துவங்கியது.
நேற்று காலை நிலவரப்படி 35.80 அடி உயரத்திற்கு (722.14 மில்லியன் கன அடி) தண்ணீர் இருந்தது. வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி புதிய ெஷட்டர் வழியாக, வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி அணையையொட்டியுள்ள விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் யாரும் ஆற்றினுள் இறங்க வேண்டாம் என வருவாய்துறை சார்பில் தண்டோரா போடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE