கடலுார் : வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி, மனு அளிக்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, எஸ்.பி., யிடம் பா.ம.க., வினர் மனு அளித்தனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு, கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வரும் 14ம் தேதி பா.ம.க., சார்பில், அறவழியில் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கோபிநாத், ரவிச்சந்தின், சசிக்குமார், கார்த்திக் உட்பட அக்கட்சியினர் கடலுார் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் மனு அளித்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., விடமும் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE